உயிரின் துடிப்பு..!
-------------------------
ஐயய்யோ
ஆழமான ஒப்பாரி எனைச் சுற்றி,
என் உயிருக்கும் உடலுக்கும் சண்டை,
விட்டுக்கொடுக்க விரும்பா உடல்,
விட்டுப்போகத் துடிக்கும் உயிர்..
மெதுவாய்
என் செவி நெருங்கி,
வேகமாய் இறந்துவிடு, எனக்கு
வேலை இருக்கிறது
சொன்னான் அந்த ஆசாமி..
அன்றொரு நாள் மற்றவன்
காதில் நான் ஓதியது..
இங்கு தான்
துடிக்கிறது மனம் வாழ்வை அனுபவிக்க
தேடித்தேடிப் பார்க்கிறேன் வாழ்வை,
கேவலம்,
ஒரு பொழுதேனும் எனையுணர்ந்து வாழ்ந்ததில்லை,
உயிர்பால் கொடுத்த அன்னை - வெறும்
முலைப்பால் கொடுத்தவளாய் தோன்றினாள்..
அழகிய மனையாளிடம் - விபச்சாரி
நாடுபவனாய் வெறும் உடல்மட்டும் ஈந்தேன்
குழந்தையின் அழகிய எச்சில் முத்தம்,
அன்றைய வரவுக்கணக்கில் இடம்பெறும் அன்றாடம்..
தோழமையின் வருடல் - வேண்டாமல்
செடியை அசைக்கும் தென்றல் போல் எனக்கு..
ஏங்கி, ஏங்கி
உளறல் வார்த்தையில் நான் கேட்கிறேன் - ஒரு
இரவல் முத்தம் என் குழந்தையிடம் இன்று..
ஏங்கும் உயிர் பிரிய பாலூட்ட வருகிறான்
என்னருகில்..
வாழ்ந்த காலமெல்லாம் உயிர்கொண்ட உலோகம்,
பார்த்தல், பேசுதல்,
கேட்டல், நுகர்தல், உணர்தல்,
கொண்டிருந்ததால்
நன் மேம்பட்ட எந்திரம் அதாவது எந்திரன்
கதறி அழுதிட துடிகிறேன்,
என் வாழ்வை நானன்றி - வேறு எவரெல்லாமோ
வாழ்ந்திருக்கிறார்..
என் முதலாளி அவனும் ஆண்டேதான்,
என் கடவுள் அவனும் ஆண்டேதான்,
என் மதங்கள், அதுவும் ஆண்டேதான்,
நான் மட்டும் - எனையறியா அடிமை..
இக்கணம் வருந்துகிறேன்
சுரண்டப்பட்ட என் உழைப்பையெல்லாம்
நினைந்து, நினைந்து இக்கணம் வருந்துகிறேன்
மேகத்தின் கொட்டும் வெள்ளை
வியர்வையில் நனைந்ததில்லை..
ஒரு நாளேனும் -
நிர்வாணமாய் நீரடவில்லை
ஒரு பொழுதேனும் -
என் குழந்தைக்கு
கால் பிடித்துவிட்டதில்லை..
அத்தனை அவசரம்
எங்கு, ஏன், எதற்கு?
அன்றைய அன்றாடங்களே என் பணி தீர்மானிக்கும்..
எண்ணெய் ஊற்றாமல்,
இற்றுப்போன இரும்புச்சக்கரம்மாய்,
எனையறியாமல் - எனை கவனிக்காமல்
உயிர் இற்று சுழன்று காலங்கள்
இன்றுவரை ஏன் என்று தெரியவில்லை..
முழுதாய் அறுபது வருடங்கள்
ஓடியபின்,
இன்று என்னுள் உறுத்தி,
எனை அனுபவிக்கத் தூண்டுகிறதே
என் வாழ்வை..
நான் பிழைத்து வருவேன்
என்னிடம் நானே மன்னிப்பு கேட்டு,
மீண்டும் முதலிருந்து,
அனுபவித்து மனிதனாய்
வாழ்ந்திடுவேன்.....
-------------------------
ஐயய்யோ
ஆழமான ஒப்பாரி எனைச் சுற்றி,
என் உயிருக்கும் உடலுக்கும் சண்டை,
விட்டுக்கொடுக்க விரும்பா உடல்,
விட்டுப்போகத் துடிக்கும் உயிர்..
மெதுவாய்
என் செவி நெருங்கி,
வேகமாய் இறந்துவிடு, எனக்கு
வேலை இருக்கிறது
சொன்னான் அந்த ஆசாமி..
அன்றொரு நாள் மற்றவன்
காதில் நான் ஓதியது..
இங்கு தான்
துடிக்கிறது மனம் வாழ்வை அனுபவிக்க
தேடித்தேடிப் பார்க்கிறேன் வாழ்வை,
கேவலம்,
ஒரு பொழுதேனும் எனையுணர்ந்து வாழ்ந்ததில்லை,
உயிர்பால் கொடுத்த அன்னை - வெறும்
முலைப்பால் கொடுத்தவளாய் தோன்றினாள்..
அழகிய மனையாளிடம் - விபச்சாரி
நாடுபவனாய் வெறும் உடல்மட்டும் ஈந்தேன்
குழந்தையின் அழகிய எச்சில் முத்தம்,
அன்றைய வரவுக்கணக்கில் இடம்பெறும் அன்றாடம்..
தோழமையின் வருடல் - வேண்டாமல்
செடியை அசைக்கும் தென்றல் போல் எனக்கு..
ஏங்கி, ஏங்கி
உளறல் வார்த்தையில் நான் கேட்கிறேன் - ஒரு
இரவல் முத்தம் என் குழந்தையிடம் இன்று..
ஏங்கும் உயிர் பிரிய பாலூட்ட வருகிறான்
என்னருகில்..
வாழ்ந்த காலமெல்லாம் உயிர்கொண்ட உலோகம்,
பார்த்தல், பேசுதல்,
கேட்டல், நுகர்தல், உணர்தல்,
கொண்டிருந்ததால்
நன் மேம்பட்ட எந்திரம் அதாவது எந்திரன்
கதறி அழுதிட துடிகிறேன்,
என் வாழ்வை நானன்றி - வேறு எவரெல்லாமோ
வாழ்ந்திருக்கிறார்..
என் முதலாளி அவனும் ஆண்டேதான்,
என் கடவுள் அவனும் ஆண்டேதான்,
என் மதங்கள், அதுவும் ஆண்டேதான்,
நான் மட்டும் - எனையறியா அடிமை..
இக்கணம் வருந்துகிறேன்
சுரண்டப்பட்ட என் உழைப்பையெல்லாம்
நினைந்து, நினைந்து இக்கணம் வருந்துகிறேன்
மேகத்தின் கொட்டும் வெள்ளை
வியர்வையில் நனைந்ததில்லை..
ஒரு நாளேனும் -
நிர்வாணமாய் நீரடவில்லை
ஒரு பொழுதேனும் -
என் குழந்தைக்கு
கால் பிடித்துவிட்டதில்லை..
அத்தனை அவசரம்
எங்கு, ஏன், எதற்கு?
அன்றைய அன்றாடங்களே என் பணி தீர்மானிக்கும்..
எண்ணெய் ஊற்றாமல்,
இற்றுப்போன இரும்புச்சக்கரம்மாய்,
எனையறியாமல் - எனை கவனிக்காமல்
உயிர் இற்று சுழன்று காலங்கள்
இன்றுவரை ஏன் என்று தெரியவில்லை..
முழுதாய் அறுபது வருடங்கள்
ஓடியபின்,
இன்று என்னுள் உறுத்தி,
எனை அனுபவிக்கத் தூண்டுகிறதே
என் வாழ்வை..
நான் பிழைத்து வருவேன்
என்னிடம் நானே மன்னிப்பு கேட்டு,
மீண்டும் முதலிருந்து,
அனுபவித்து மனிதனாய்
வாழ்ந்திடுவேன்.....
No comments:
Post a Comment